கோவையில் டாஸ்மாக் பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம்: இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு மண்டை உடைப்பு..!

சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாடிய போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரகாஷ் (21). நேற்று இரவு பிரகாஷின் நண்பர் குப்புராஜின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர்.

இதனையடுத்து, மது அருந்திய பின்னர் நண்பர்கள் அனைவரும் குப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நுரை வரும் ஸ்பிரேவை நண்பர்கள் மீது தெளித்து உள்ளனர்.

அந்த சமயத்தில் பக்கத்து டேபிளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (38) மற்றும் அவரது நண்பர்கள் மீது தெறித்துள்ளது. இதையடுத்து இப்ராகிம் மற்றும் நண்பர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கத் துவங்கினர்.

பின்னர், பீர் பாட்டிலை எடுத்து பிரகாஷ் மற்றும் உடன் வந்திருந்த பிரபு தலையில் இப்ராகிம் உட்பட அவரது நண்பர்கள் அடித்துள்ளனர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடியது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பிரகாஷ் உடன் வந்திருந்த நண்பர்கள் இப்ராகிம் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாட்டில்கள் மற்றும் சேர் டேபிள்களை தூக்கி வீசினர். இதில் இப்ராகிம் உட்பட அவரது நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. நிலைமை கலவரமாகி போவதை அறிந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போர்க்களம் போல காட்சியளித்த அந்த இடத்தில் காயமடைந்து கிடந்த அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் இப்ராகிம் உட்பட 3 பேர் மீதும் இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் உட்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...