விரைவில் கோவை அரசு பேருந்துகளில் 'புகார்' புத்தகம் வைக்கப்படும்..!

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகளில் திருத்த வரைவு அறிவிப்பு ஆணைப்படி விரைவில் கோவை அரசு பேருந்துகளில் புகார் புத்தகம் வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


கோவை: கோவை கோட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளில் விரைவில் புகார் புத்தகம் வைக்கப்படும், என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ் பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான வரைவு அறிவிப்பு ஆணை வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு ஆணை செல்லத்தக்க காலம் 30 நாட்கள் ஆகும். அதற்கு முன்பு இந்த வரைவு குறித்து மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், கருத்துக்கள் இருந்தாலும் அல்லது ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்கலாம்.

இந்த வரைவு திருத்தத்தின்படி அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் இல்லாத நிலையில், அந்த பேருந்தின் ஒட்டுநர்கள் பொறுப்பாளர்களாக அமர்த்தப்படுவர். அந்த வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி யாராவது பெண்களை நோக்கி போட்டோ அல்லது வீடியோ எடுத்தல் என்பது உள்ளிட்ட ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டால், அவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

பெண்களிடம் தவறாக நடக்கும் எந்த ஒரு பயணியையும் அவரது இருக்கையில் இருந்து எழுப்பி அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லலாம். அந்த பேருந்தில் புகார் புத்தகம் ஒன்றை பயணிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் விதமாக வைக்க வேண்டும். அந்த புத்தகத்தை காவல் அதிகாரிகள் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் கேட்கும்போது கொடுக்க வேண்டும்", இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆணையை செயல்படுத்துதல் குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை கோட்டத்தில் உள்ள அரசு பஸ்களில் புகார் புத்தகங்கள் வைக்கப்படும். பயணிகள் அவர்களது கருத்துகளை அதில் தெரிவிக்கலாம். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...