முகாமில் கலந்து கொண்ட மாடுகளுக்குக் கோமாரி நோய், குடற்புண் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும் சினைப் பரிசோதனை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோதவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் அழைத்து வரப்பட்டது.

அப்போது முகாமில் கலந்து கொண்ட வடசித்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ், சொக்கனூர் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் கெளசிகா ஆகியோர் கலந்து கொண்டு மாடுகளுக்குக் கோமாரி நோய், குடற்புண் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டது, மேலும் சினைப் பரிசோதனை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோதவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் அழைத்து வரப்பட்டது.
அப்போது முகாமில் கலந்து கொண்ட வடசித்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ், சொக்கனூர் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் கெளசிகா ஆகியோர் கலந்து கொண்டு மாடுகளுக்குக் கோமாரி நோய், குடற்புண் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டது, மேலும் சினைப் பரிசோதனை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.