கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி நடத்திய விசாரணையில், பயணிகளிடம் ரூ. 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது.
கோவை: கோவையில் வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தக பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான ஒரு காரை கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை சிட்டி கால்டேக்ஸி சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணித்தவர்களிடம் ரூபாய் 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமையாளரிடம் கார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஆவணங்கள் ஏதும் இல்லையெனில் அதற்கும் சேர்த்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தக பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான ஒரு காரை கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை சிட்டி கால்டேக்ஸி சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணித்தவர்களிடம் ரூபாய் 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமையாளரிடம் கார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஆவணங்கள் ஏதும் இல்லையெனில் அதற்கும் சேர்த்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.