கோவையில் வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான கார் பறிமுதல்..! கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை..!

கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி நடத்திய விசாரணையில், பயணிகளிடம் ரூ. 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தக பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான ஒரு காரை கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை சிட்டி கால்டேக்ஸி சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணித்தவர்களிடம் ரூபாய் 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமையாளரிடம் கார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஆவணங்கள் ஏதும் இல்லையெனில் அதற்கும் சேர்த்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...