6 தளங்களில், 448 குடும்பங்கள் வசிக்கும் வகையில் ரூ. 45.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
கோவை: கோவை டவுன்ஹால் சிஎம்சி காலனி பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் புதிய கட்டிடங்கள் 2023ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கோவை சிஎம்சி காலனி பொது மக்கள் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களாகவும், ஒப்பந்த கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்கள் பல வருடங்களாய் வழிபட்டு கொண்டிருக்கும் மதுரை வீரன் கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் 6 தளங்களாக 448 வீடுகளாக அமைக்க உள்ளதாக மாநகராட்சி கூறிய நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளருக்கு கோவிலை இடிக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.
நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு அன்று ஆணையாளரை சந்தித்த பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதனை கேட்டறிந்த ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்;
தற்போது மாநகராட்சி அமைத்து தந்துள்ள தற்காலிக இடத்தில் வசித்து வருகின்றோம். தாங்கள் வசிக்கும் இப்பகுதியில் கழிவரை சரிவர அமைக்கப்படவில்லை என்றும், சுகாதார வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும், அடிப்படை வசதி எதுவும் அமைத்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மக்களுக்காக செயல்படும் அரசாங்கம் எங்களுக்கு ஏற்ப செயல் திட்டம் செய்து தர வேண்டும் எனவும் கூறினர்.
இது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் கூறுகையில்;
432 குடும்பங்கள் 4 தளங்களில் வசித்துக்கொண்டிருந்த நிலையில், கல்வி மண்டலமாக அவ்விடத்தில் அமையப்பெற்ற காரணமாக தற்பொழுது, அதனை அகற்றிவிட்டு 6 தளங்களில், 448 குடும்பங்கள் வசிக்கும் வகையில் 45.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் லிப்ட் அமைத்துத் தரவுள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டமானது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
கோவை சிஎம்சி காலனி பொது மக்கள் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களாகவும், ஒப்பந்த கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்கள் பல வருடங்களாய் வழிபட்டு கொண்டிருக்கும் மதுரை வீரன் கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் 6 தளங்களாக 448 வீடுகளாக அமைக்க உள்ளதாக மாநகராட்சி கூறிய நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளருக்கு கோவிலை இடிக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.
நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு அன்று ஆணையாளரை சந்தித்த பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதனை கேட்டறிந்த ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்;
தற்போது மாநகராட்சி அமைத்து தந்துள்ள தற்காலிக இடத்தில் வசித்து வருகின்றோம். தாங்கள் வசிக்கும் இப்பகுதியில் கழிவரை சரிவர அமைக்கப்படவில்லை என்றும், சுகாதார வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும், அடிப்படை வசதி எதுவும் அமைத்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மக்களுக்காக செயல்படும் அரசாங்கம் எங்களுக்கு ஏற்ப செயல் திட்டம் செய்து தர வேண்டும் எனவும் கூறினர்.
இது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் கூறுகையில்;
432 குடும்பங்கள் 4 தளங்களில் வசித்துக்கொண்டிருந்த நிலையில், கல்வி மண்டலமாக அவ்விடத்தில் அமையப்பெற்ற காரணமாக தற்பொழுது, அதனை அகற்றிவிட்டு 6 தளங்களில், 448 குடும்பங்கள் வசிக்கும் வகையில் 45.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் லிப்ட் அமைத்துத் தரவுள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டமானது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.