கடத்தலில் ஈடுபட்ட அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
கோவை மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை பொள்ளாச்சி யூனிட் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரை சேர்ந்த அப்பு என்கிற அபுதாகிர் (32) என்பதும் ஆத்துப்பாலம் அருகே தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர், வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.
கோவை மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை பொள்ளாச்சி யூனிட் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரை சேர்ந்த அப்பு என்கிற அபுதாகிர் (32) என்பதும் ஆத்துப்பாலம் அருகே தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர், வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.