கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

கடத்தலில் ஈடுபட்ட அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

கோவை மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை பொள்ளாச்சி யூனிட் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரை சேர்ந்த அப்பு என்கிற அபுதாகிர் (32) என்பதும் ஆத்துப்பாலம் அருகே தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

பின்னர், வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...