பண்டிகை காலங்கள் வருவதால் கோவையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் தகவல்..!

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பண்டிகை காலங்கள் வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த அச்சம் பெரிதும் மக்கள் இடத்தில் பரவியுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், தெலுங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது;

கொரோனா 2வது அலையின் போது கோவை மாநகராட்சி சார்பாக வார்டு வார்டாக வாகனங்கள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் அந்த வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால் வாகனங்கள் மூலம் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ள வாகனங்களை அதிகப்படுத்த உள்ளோம். கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா காலங்கள் வருவதால் மாநகராட்சி சார்பாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா 2வது அலையின்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாநகராட்சி சார்பாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு தினந்தோறும் ஒரு லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...