பண்டிகை காலங்கள் வருவதால் கோவையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் தகவல்..!

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பண்டிகை காலங்கள் வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த அச்சம் பெரிதும் மக்கள் இடத்தில் பரவியுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், தெலுங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது;

கொரோனா 2வது அலையின் போது கோவை மாநகராட்சி சார்பாக வார்டு வார்டாக வாகனங்கள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் அந்த வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால் வாகனங்கள் மூலம் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ள வாகனங்களை அதிகப்படுத்த உள்ளோம். கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா காலங்கள் வருவதால் மாநகராட்சி சார்பாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா 2வது அலையின்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாநகராட்சி சார்பாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு தினந்தோறும் ஒரு லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...