கோவையில் சிறப்பு காவல் படை ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையால் தற்கொலையா..??

ஆய்வாளர் செல்வராஜ் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தற்கொலை, பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை, கரும்முழி பகுதியைச் சேர்ந்தவர் காவலர் செல்வராஜ் இவர் தற்பொழுது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். கோவைப்புதூர் பகுதியில், உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ஆம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 6-மணிக்கு வழக்கம் போல கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஆய்வாளர் செல்வராஜ் மதியம் 2.10-மணிக்கு தனது அறையில் கைலி மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முகாமில் உள்ள காவலர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த உயர் அதிகாரிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், ஆய்வாளர் செல்வராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட காவல் ஆய்வாளர் செல்வராஜிற்குப் பாபா அருள் ராணி ஜுலியட் என்ற மனைவியும், சந்தோஷ், கிருஸ்டோபர் என்ற இருமகன்களும் உள்ளனர். இதில் சந்தோஷ் ஆவடியில் காவலராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...