கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தகொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா 2-ஆவது அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா புற நோயாளிகள் பிரிவு,கொரோனா பரிசோதனை மையங்கள் அருகிலுள்ள அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
மேலும், அரசு கொரோனா சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டபோதுகொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது அரசுக் கல்லூரியில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிா்மலா கூறியதாவது:-
தற்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்காக அங்குத் தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டமைப்பு எதுவும் அகற்றப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது இந்த மையங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றார்.
கோவையில் கொரோனா 2-ஆவது அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா புற நோயாளிகள் பிரிவு,கொரோனா பரிசோதனை மையங்கள் அருகிலுள்ள அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
மேலும், அரசு கொரோனா சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டபோதுகொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது அரசுக் கல்லூரியில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிா்மலா கூறியதாவது:-
தற்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்காக அங்குத் தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டமைப்பு எதுவும் அகற்றப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது இந்த மையங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றார்.