கொரோனா புறநோயாளிகள் சிகிச்சை மையம் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தகொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா 2-ஆவது அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா புற நோயாளிகள் பிரிவு,கொரோனா பரிசோதனை மையங்கள் அருகிலுள்ள அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டது.

மேலும், அரசு கொரோனா சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டபோதுகொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது அரசுக் கல்லூரியில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிா்மலா கூறியதாவது:-

தற்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்காக அங்குத் தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டமைப்பு எதுவும் அகற்றப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது இந்த மையங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...