வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்ற போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாலத்தின் அருகிலிருந்த சுவரில் சாய்ந்தவாறு நின்ற போது நிலைத்தடுமாறி மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வாலாங்குளம் அருகே மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிப்புதூரில் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் காட்வின் (29), இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி வேளாங்கண்ணி பெட்சி கேத்தரின் (27), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காட்வின் குழந்தைப் பருவத்திலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் தனது மனைவியுடன் பைக்கில் உக்கடம் வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது.
தொடர்ந்து பைக்கை நிறுத்திய காட்வின் பாலத்தின் அருகில் சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனைப் பார்த்துக் கதறி மனைவி கூச்சல் போட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடிவந்துமீட்டு நீரிலிருந்து மேலே தூக்கி வந்தனர்.
பின்னர் உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்பு கணவன் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிப்புதூரில் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் காட்வின் (29), இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி வேளாங்கண்ணி பெட்சி கேத்தரின் (27), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காட்வின் குழந்தைப் பருவத்திலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் தனது மனைவியுடன் பைக்கில் உக்கடம் வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது.
தொடர்ந்து பைக்கை நிறுத்திய காட்வின் பாலத்தின் அருகில் சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனைப் பார்த்துக் கதறி மனைவி கூச்சல் போட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடிவந்துமீட்டு நீரிலிருந்து மேலே தூக்கி வந்தனர்.
பின்னர் உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்பு கணவன் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.