வாலாங்குளம் அருகே மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலி

வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்ற போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாலத்தின் அருகிலிருந்த சுவரில் சாய்ந்தவாறு நின்ற போது நிலைத்தடுமாறி மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வாலாங்குளம் அருகே மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரில் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் காட்வின் (29), இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி வேளாங்கண்ணி பெட்சி கேத்தரின் (27), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காட்வின் குழந்தைப் பருவத்திலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவில் தனது மனைவியுடன் பைக்கில் உக்கடம் வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது.

தொடர்ந்து பைக்கை நிறுத்திய காட்வின் பாலத்தின் அருகில் சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனைப் பார்த்துக் கதறி மனைவி கூச்சல் போட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடிவந்துமீட்டு நீரிலிருந்து மேலே தூக்கி வந்தனர்.

பின்னர் உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்பு கணவன் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...