மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 40-அடி சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பள்ளக்காட்டு புதூர் பிரிவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குப் பாத்தியப்பட்ட 40-அடி சாலையைக் கடந்த 2006-ம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் முன்புறம் அமைந்துள்ள 10-ஏக்கர் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் வீட்டு மனை அமைக்கும் நோக்கில் மனைப்பதிவு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

அதில் 40-அடி சாலையைச் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த சாலையையும் சேர்த்து மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகால், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 40-அடி சாலையை மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பள்ளக்காட்டு புதூர் பிரிவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குப் பாத்தியப்பட்ட 40-அடி சாலையைக் கடந்த 2006-ம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் முன்புறம் அமைந்துள்ள 10-ஏக்கர் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் வீட்டு மனை அமைக்கும் நோக்கில் மனைப்பதிவு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
அதில் 40-அடி சாலையைச் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த சாலையையும் சேர்த்து மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகால், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 40-அடி சாலையை மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.