40-அடி சாலையை மீட்டுத்தர கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 40-அடி சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பள்ளக்காட்டு புதூர் பிரிவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குப் பாத்தியப்பட்ட 40-அடி சாலையைக் கடந்த 2006-ம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் முன்புறம் அமைந்துள்ள 10-ஏக்கர் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் வீட்டு மனை அமைக்கும் நோக்கில் மனைப்பதிவு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.



அதில் 40-அடி சாலையைச் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த சாலையையும் சேர்த்து மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகால், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 40-அடி சாலையை மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...