40-அடி சாலையை மீட்டுத்தர கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 40-அடி சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பள்ளக்காட்டு புதூர் பிரிவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குப் பாத்தியப்பட்ட 40-அடி சாலையைக் கடந்த 2006-ம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் முன்புறம் அமைந்துள்ள 10-ஏக்கர் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் வீட்டு மனை அமைக்கும் நோக்கில் மனைப்பதிவு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.



அதில் 40-அடி சாலையைச் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த சாலையையும் சேர்த்து மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகால், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 40-அடி சாலையை மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...