பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சுப்பையா சிபிசி பள்ளி வளாகத்தில் இருந்த 25 ஆண்டுகால பழமையான நாவல் மரம் இன்று வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.
திருப்பூர் கல்லூரி சாலையில் சுப்பையா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் வளர்ந்த 25 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் உள்ளது.
இதனை வெட்டி அகற்றாமல் வேறு இடத்தில் நடவு செய்ய பள்ளி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் முடிவு செய்து இன்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த 25 ஆண்டு கால பழமையான நாவல் மரத்தை தோண்டி 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளியின் வேறு பகுதியில் நடவு செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி நிர்வாகம் 25 ஆண்டு கால பழமையான மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் சுப்பையா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் வளர்ந்த 25 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் உள்ளது.
இதனை வெட்டி அகற்றாமல் வேறு இடத்தில் நடவு செய்ய பள்ளி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் முடிவு செய்து இன்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த 25 ஆண்டு கால பழமையான நாவல் மரத்தை தோண்டி 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளியின் வேறு பகுதியில் நடவு செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி நிர்வாகம் 25 ஆண்டு கால பழமையான மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.