திருப்பூர் சுப்பையா சிபிசி பள்ளி வளாகத்தில் இருந்த 25 வருடம் பழமையான நாவல் மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்து சாதனை..!

பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சுப்பையா சிபிசி பள்ளி வளாகத்தில் இருந்த 25 ஆண்டுகால பழமையான நாவல் மரம் இன்று வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.

திருப்பூர் கல்லூரி சாலையில் சுப்பையா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் வளர்ந்த 25 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் உள்ளது.

இதனை வெட்டி அகற்றாமல் வேறு இடத்தில் நடவு செய்ய பள்ளி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் முடிவு செய்து இன்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த 25 ஆண்டு கால பழமையான நாவல் மரத்தை தோண்டி 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளியின் வேறு பகுதியில் நடவு செய்யப்பட்டது.



பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி நிர்வாகம் 25 ஆண்டு கால பழமையான மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...