மேலும், விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராடி உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயண சாமி நாயுடுவின் நினைவு அஞ்சலியானது நடைபெற்றது.
இதில் அவரது புகைப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நாராயணசாமி நாயுடுவின் நினைவுநாளை விவசாயிகள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தென்னை தொழில் நெருக்கடியில் உள்ள நிலையை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும் விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராடி உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயண சாமி நாயுடுவின் நினைவு அஞ்சலியானது நடைபெற்றது.
இதில் அவரது புகைப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நாராயணசாமி நாயுடுவின் நினைவுநாளை விவசாயிகள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தென்னை தொழில் நெருக்கடியில் உள்ள நிலையை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும் விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.