நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!

மேலும், விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராடி உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயண சாமி நாயுடுவின் நினைவு அஞ்சலியானது நடைபெற்றது.

இதில் அவரது புகைப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நாராயணசாமி நாயுடுவின் நினைவுநாளை விவசாயிகள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தென்னை தொழில் நெருக்கடியில் உள்ள நிலையை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும் விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...