தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்களின் நலன் கருதி கடைகள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டுமென கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மேற்கண்ட திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இருக்கைகள் வசதி செய்துதர வேண்டும்.
மேலும், இருக்கை வசதி குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இது தொடர்பாக அனைத்து வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து அரசின் அமலாக்கப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்களின் நலன் கருதி கடைகள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டுமென கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மேற்கண்ட திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இருக்கைகள் வசதி செய்துதர வேண்டும்.
மேலும், இருக்கை வசதி குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இது தொடர்பாக அனைத்து வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து அரசின் அமலாக்கப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.