கோவையில் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் - தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு..!

தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர்களின் நலன் கருதி கடைகள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டுமென கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மேற்கண்ட திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இருக்கைகள் வசதி செய்துதர வேண்டும்.

மேலும், இருக்கை வசதி குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இது தொடர்பாக அனைத்து வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து அரசின் அமலாக்கப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...