கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது.
கோவை: கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் நீண்ட நாட்கள் பிறகு நிரம்பி உள்ளது. குளம் நிரம்பியதை கொண்டாடும் விதமாகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோதவாடி குளத்தை பார்வையிட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த திமுக வினர் சிலருக்கும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டு உள்ளனர்.

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது சிலமர்ம நபர்கள் செருப்பை வீசியதாககூறப்படுகிறது. இதனையடுத்து,அவரை காவல்துறையினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து வந்து வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் நீண்ட நாட்கள் பிறகு நிரம்பி உள்ளது. குளம் நிரம்பியதை கொண்டாடும் விதமாகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோதவாடி குளத்தை பார்வையிட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த திமுக வினர் சிலருக்கும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டு உள்ளனர்.
இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது சிலமர்ம நபர்கள் செருப்பை வீசியதாககூறப்படுகிறது. இதனையடுத்து,அவரை காவல்துறையினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து வந்து வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.