நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: உதகை மலை ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கி வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.
மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில், கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் இம்மலை ரயில் சேவையானது நாளை அதாவது டிசம்பர் 22 ஆம் தேதி முதல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கி வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.
மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில், கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் இம்மலை ரயில் சேவையானது நாளை அதாவது டிசம்பர் 22 ஆம் தேதி முதல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.