உதகை மலை ரயில் சேவை நாளை முதல் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி: உதகை மலை ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கி வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.



இந்நிலையில், கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் இம்மலை ரயில் சேவையானது நாளை அதாவது டிசம்பர் 22 ஆம் தேதி முதல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...