கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.
கோவை: கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் கே.வி.கே நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்துச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் கே.வி.கே நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்துச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.