கோவை மருதமலை அருகே இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை கூட்டம்..! அரிசி மூட்டைகள், பழ வண்டி மற்றும் வீடு சேதம்.

கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று 6 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று இரவு ஐ ஓ.பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.


கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று4 பெண் யானைகள், ஒரு ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் நேற்று இரவுஐ ஓ.பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இந்த யானைக் கூட்டம், அங்குள்ள ஆறுமுகம் என்பவர் அரிசிக் கடையின் இரும்பு ஷட்டரைக் கால்களால் உதைத்து, உடைத்து உள்ளிருந்த சுமார் 13 அரிசி மூட்டைகளை வெளியே இழுத்தன. பின்னர், மூட்டைகளில் இருந்த அரிசியை சாப்பிட்டும் , தூக்கி வீசியும் சேதப்படுத்தின.

பின்னர், ஐ.ஓ.பி காலனி தளபதி நகரில் நுழைந்த யானைகள், அங்கு பழ வியாபாரியான வள்ளிகண்ணு என்பவர் சாலையோரம் நிறுத்தியிருந்த தள்ளு வண்டியிலிருந்த பழங்களைச் சாப்பிட்டன. இதே போல, பாலாஜி நகரில் ஜெயந்தி என்பவரின் தள்ளு வண்டியில் இருந்த வாழை, ஆப்பிள், கொய்யா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிட்டு விட்டு, தள்ளு வண்டிகளை உருட்டி சேதப்படுத்தின.

அங்கிருந்து மீண்டும் ஐ.ஓ.பி காலனி, தளபதி நகருக்குள் புகுந்த யானை கூட்டம், செல்வன் (63), அவரது மனைவி மணி (55) ஆகியோர் ஹாலோபிளாக் கற்களால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவரை உடைத்து, வீட்டிலிருந்த கட்டில், பீரோ, பாத்திரப் பண்டங்களை உருட்டி, உள்ளே இருந்த அரிசி மூட்டை ஒன்றை இழுத்துச் சாப்பிட்டு, சேதப்படுத்தின.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஐ.ஓ.பி குடியிருப்பு பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட யானை கூட்டத்தைவனப்பகுதிக்குள் விரட்டினர். உணவு தேடி மீண்டும் யானை கூட்டம் வருமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...