போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்தநபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது முன்விரோதம் காரணமாகத் தனது சகோதரியின்குழந்தையை வைத்துக் கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீதிபதி சுகந்தி விசாரித்துப் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தசங்கர் என்பவரின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். போக்சோ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்தியாவில் முதல்முறையாகப் பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது முன்விரோதம் காரணமாகத் தனது சகோதரியின்குழந்தையை வைத்துக் கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீதிபதி சுகந்தி விசாரித்துப் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தசங்கர் என்பவரின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். போக்சோ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்தியாவில் முதல்முறையாகப் பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.