போக்சோ வழக்கு: பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்தநபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது முன்விரோதம் காரணமாகத் தனது சகோதரியின்குழந்தையை வைத்துக் கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் அளித்துள்ளார்.



இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீதிபதி சுகந்தி விசாரித்துப் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தசங்கர் என்பவரின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். போக்சோ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்தியாவில் முதல்முறையாகப் பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...