போக்சோ வழக்கு: பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்தநபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது முன்விரோதம் காரணமாகத் தனது சகோதரியின்குழந்தையை வைத்துக் கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் அளித்துள்ளார்.



இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீதிபதி சுகந்தி விசாரித்துப் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தசங்கர் என்பவரின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். போக்சோ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்தியாவில் முதல்முறையாகப் பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...