நள்ளிரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் நேற்று இரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், அந்த வழியே சென்ற பொதுமக்கள் இந்த காட்சியைக் கண்டு அச்சமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த போது அந்த சண்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் அதனை எடுக்கக் கூடாது என்றும் அவரிடம் வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த வீடியோவானது தற்போது திருப்பூரில் வைரலாகி வருகிறது. இதுபோன்று இளைஞர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் சண்டைகளை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து இது போன்ற பொது இடங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் நேற்று இரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், அந்த வழியே சென்ற பொதுமக்கள் இந்த காட்சியைக் கண்டு அச்சமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த போது அந்த சண்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் அதனை எடுக்கக் கூடாது என்றும் அவரிடம் வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த வீடியோவானது தற்போது திருப்பூரில் வைரலாகி வருகிறது. இதுபோன்று இளைஞர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் சண்டைகளை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து இது போன்ற பொது இடங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.