தூய்மை பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் ஒதுக்கீடு செய்து தர வேண்டியும், குடியிருப்புகளுக்கு பணம் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என நியு சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், நியு சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வந்த நிலையில், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் அதனை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதாகவும் அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கூறியதாகவும் 18 மாத காலத்தில் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேலாக வீடுகளை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகள் கேட்கும் தொகையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தூய்மை பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், நியு சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வந்த நிலையில், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் அதனை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதாகவும் அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கூறியதாகவும் 18 மாத காலத்தில் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேலாக வீடுகளை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகள் கேட்கும் தொகையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தூய்மை பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.