கோவையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

தூய்மை பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் ஒதுக்கீடு செய்து தர வேண்டியும், குடியிருப்புகளுக்கு பணம் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என நியு சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், நியு சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வந்த நிலையில், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் அதனை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதாகவும் அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கூறியதாகவும் 18 மாத காலத்தில் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேலாக வீடுகளை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகள் கேட்கும் தொகையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...