கோவையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

தூய்மை பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் ஒதுக்கீடு செய்து தர வேண்டியும், குடியிருப்புகளுக்கு பணம் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என நியு சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், நியு சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வந்த நிலையில், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் அதனை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதாகவும் அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கூறியதாகவும் 18 மாத காலத்தில் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேலாக வீடுகளை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகள் கேட்கும் தொகையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...