கோவையில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்திச் செல்வதாக ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை: கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் வந்து கோவை ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.

நாட்டுமாடுகளையும், கால்நடைகளையும் இறைச்சிக்காக விதிகளை மீறி கோவையில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கேரளாவிற்கு கடத்துவதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் மணிகண்டன் தலைமையில் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சட்டவிரோதமாக நாட்டு மாடுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் கடத்துவதாகவும் போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்தி செல்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட கால்நடை இயக்குநர், மிருகவதை தடுப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...