போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்திச் செல்வதாக ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை: கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் வந்து கோவை ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.
நாட்டுமாடுகளையும், கால்நடைகளையும் இறைச்சிக்காக விதிகளை மீறி கோவையில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கேரளாவிற்கு கடத்துவதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் மணிகண்டன் தலைமையில் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சட்டவிரோதமாக நாட்டு மாடுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் கடத்துவதாகவும் போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்தி செல்வதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட கால்நடை இயக்குநர், மிருகவதை தடுப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
நாட்டுமாடுகளையும், கால்நடைகளையும் இறைச்சிக்காக விதிகளை மீறி கோவையில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கேரளாவிற்கு கடத்துவதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் மணிகண்டன் தலைமையில் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சட்டவிரோதமாக நாட்டு மாடுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் கடத்துவதாகவும் போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்தி செல்வதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட கால்நடை இயக்குநர், மிருகவதை தடுப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.