கோவையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கக் கோரியும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 1% வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் கோயம்புத்தூர் காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய மாற்று திறனாளிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்குவது போன்று 3000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் பணிகளில் காது கேளாதவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு கூறியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரத்திற்காக மட்டுமே அரசை பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டிருந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் போன்ற இதர பணிகளில் 1% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல, வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...