வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கக் கோரியும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 1% வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் கோயம்புத்தூர் காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய மாற்று திறனாளிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்குவது போன்று 3000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் பணிகளில் காது கேளாதவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு கூறியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரத்திற்காக மட்டுமே அரசை பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டிருந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் போன்ற இதர பணிகளில் 1% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
அதேபோல, வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய மாற்று திறனாளிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்குவது போன்று 3000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் பணிகளில் காது கேளாதவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு கூறியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரத்திற்காக மட்டுமே அரசை பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டிருந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் போன்ற இதர பணிகளில் 1% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
அதேபோல, வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.