பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..!

சூரிய ஒளி மின்சாரத்தை வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்காக அரசு மானியம் வழங்கி வருவதாக விழிப்புணர்வு செய்தனர்.


கோவை: மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார வார விழா கடைபிடிக்கப்படுகிறது இதனையடுத்து, மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று பொள்ளாச்சி மின்வாரிய ஊழியர்கள் சார்பில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு அவசியமானது, மின்சாரத்தை தேவையில்லாமல் விரயமாக்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.



பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய பேரணி, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மின்வாரிய ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.

பொதுமக்கள் மின் விரயம் ஆவதை தவிர்க்க குண்டு பல்புகளை மாற்றி எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும், குமிழ் விளக்கை பயன்படுத்துவதால் 90 விழுக்காடு மின்சாரம் வீணாகிறது. தேவையில்லாத போது விளக்கு, மின்விசிறி, மின் சாதனங்களை நிறுத்திவிட வேண்டும்,

மேலும், சூரிய ஒளி மின்சாரத்தை வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த வேண்டும், அதற்காக அரசு மானியம் வழங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் வரும் காலங்களில் மின்சார சிக்கனத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டிற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...