சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 10 ,11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .
இதனால் பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 10 ,11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .
இதனால் பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.