கிணத்துக்கடவு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 2-ம் கட்டமாக 10 ,11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .

இதனால் பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...