கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடமாடும் INDCO தேநீரகத்தை (டீக்கடை) துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் டீக்கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விலையாக டீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை காண்ட்ரேட்டிற்கு எடுத்துள்ளவர்கள் மாதம் 25,000 ரூபாயை தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவர். 2 வருடம் காண்ட்ரேட்டிற்கு இந்த வாகனம் விடப்படும்.
இந்த வாகனம் பெரும்பாலும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடமாடும் INDCO தேநீரகத்தை (டீக்கடை) துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் டீக்கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விலையாக டீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை காண்ட்ரேட்டிற்கு எடுத்துள்ளவர்கள் மாதம் 25,000 ரூபாயை தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவர். 2 வருடம் காண்ட்ரேட்டிற்கு இந்த வாகனம் விடப்படும்.
இந்த வாகனம் பெரும்பாலும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.