கோவையில் நடமாடும் டீக்கடை..!! மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்..!

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடமாடும் INDCO தேநீரகத்தை (டீக்கடை) துவக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் டீக்கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விலையாக டீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதனை காண்ட்ரேட்டிற்கு எடுத்துள்ளவர்கள் மாதம் 25,000 ரூபாயை தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவர். 2 வருடம் காண்ட்ரேட்டிற்கு இந்த வாகனம் விடப்படும்.

இந்த வாகனம் பெரும்பாலும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...