தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தேசத்தின் தண்ணீர் மனிதர் என அழைக்கக் கூடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் நதி மற்றும் ஆற்று வளங்களைப் பாதுகாப்பது அவசியமாக இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நதி மற்றும் ஆறுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பதாகவும் ஆற்று வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.

ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும்,குறிப்பாகத் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தச் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறு மற்றும் நதிகளிலே உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள்,நகரக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசத்தின் தண்ணீர் மனிதர் என அழைக்கக் கூடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் நதி மற்றும் ஆற்று வளங்களைப் பாதுகாப்பது அவசியமாக இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நதி மற்றும் ஆறுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பதாகவும் ஆற்று வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.
ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும்,குறிப்பாகத் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தச் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறு மற்றும் நதிகளிலே உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள்,நகரக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.