தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது- தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்

தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் தண்ணீர் மனிதர் என அழைக்கக் கூடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் நதி மற்றும் ஆற்று வளங்களைப் பாதுகாப்பது அவசியமாக இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நதி மற்றும் ஆறுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பதாகவும் ஆற்று வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.



ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும்,குறிப்பாகத் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தச் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறு மற்றும் நதிகளிலே உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள்,நகரக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...