புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருடுபோன வைர நகை பற்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியிலுள்ள சுபகனேஷ் கார்டனில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது மனைவியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து, தன் மனைவி அணிந்திருந்த மூன்றரை பவுன் உள்ள வைரம் பதித்த தங்க நகையை கழட்டி வீட்டிலிருந்த மேஜை டிராயரில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், டிராயறை திறந்து பார்த்து போது நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இது குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், திருடுபோன வைர நகை பற்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.