குட்டை புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ள கோவில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை அருகே சூலூரில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டிணம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் வாசுதேவன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணை கொட்டி மேலும் 7 கோவில்கள் கட்டப்பட்டன.
இதை எதிர்த்து குட்டையின் அருகே இருந்த விவசாயிகள் தங்கள் பூமிக்குச் செல்லும் வழித்தடத்தை அமைத்துத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புறம்போக்கு இடத்தில் கட்டி உள்ள கோயில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் சூலூர் வருவாய் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்னக்கொடி, ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தனர்.
இதையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர், நவநீதகிருஷ்ணன் உளவுப் பிரிவு காவலர் சந்துரு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி காவலர்கள் அனுசியா உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோயில்கள், கருட கம்பியை இடித்து அகற்றினர்.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோயில் இடிக்கப்படுவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டிணம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் வாசுதேவன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணை கொட்டி மேலும் 7 கோவில்கள் கட்டப்பட்டன.
இதை எதிர்த்து குட்டையின் அருகே இருந்த விவசாயிகள் தங்கள் பூமிக்குச் செல்லும் வழித்தடத்தை அமைத்துத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புறம்போக்கு இடத்தில் கட்டி உள்ள கோயில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் சூலூர் வருவாய் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்னக்கொடி, ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தனர்.
இதையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர், நவநீதகிருஷ்ணன் உளவுப் பிரிவு காவலர் சந்துரு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி காவலர்கள் அனுசியா உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோயில்கள், கருட கம்பியை இடித்து அகற்றினர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோயில் இடிக்கப்படுவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.