கோவை அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 3 கோவில்கள் இடித்து அகற்றம்..!

குட்டை புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ள கோவில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை அருகே சூலூரில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டிணம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் வாசுதேவன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணை கொட்டி மேலும் 7 கோவில்கள் கட்டப்பட்டன.

இதை எதிர்த்து குட்டையின் அருகே இருந்த விவசாயிகள் தங்கள் பூமிக்குச் செல்லும் வழித்தடத்தை அமைத்துத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புறம்போக்கு இடத்தில் கட்டி உள்ள கோயில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சூலூர் வருவாய் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்னக்கொடி, ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தனர்.

இதையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர், நவநீதகிருஷ்ணன் உளவுப் பிரிவு காவலர் சந்துரு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி காவலர்கள் அனுசியா உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோயில்கள், கருட கம்பியை இடித்து அகற்றினர்.



இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோயில் இடிக்கப்படுவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...