கோவையில் குற்றங்களை தடுப்பதற்காக சந்தேகப்படக் கூடிய நபர்களை புகைப்படம் எடுத்து விசாரிக்கும் போலீசார்..!

மேலும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் குற்றங்களை தடுப்பதற்காக சந்தேகப்படக் கூடிய நபர்களை புகைப்படம் எடுத்து விசாரணையை போலீசார் துவக்கியுள்ளனர்.

கோவை மாநகரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடித்து கைது செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை மையப்படுத்தி அங்கு சிறப்பு வாகன தணிக்கை செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது:-

மாநகரில் 50 இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காலை, மதியம், மாலை, இரவு, நேரங்களில் காவல் துறையினர் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் முகத்தை தனது செல்போனில் பதிவு செய்து ஃபேஸ் ரெக கனேஷன் என்ற பிரத்யேக செயலி மூலமாக ஒப்பீட்டு விசாரிப்பார்.

மேலும், ஏறத்தாழ 250 காவலர்கள் இப்பணிகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...