மேலும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் குற்றங்களை தடுப்பதற்காக சந்தேகப்படக் கூடிய நபர்களை புகைப்படம் எடுத்து விசாரணையை போலீசார் துவக்கியுள்ளனர்.
கோவை மாநகரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடித்து கைது செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை மையப்படுத்தி அங்கு சிறப்பு வாகன தணிக்கை செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது:-
மாநகரில் 50 இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காலை, மதியம், மாலை, இரவு, நேரங்களில் காவல் துறையினர் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் முகத்தை தனது செல்போனில் பதிவு செய்து ஃபேஸ் ரெக கனேஷன் என்ற பிரத்யேக செயலி மூலமாக ஒப்பீட்டு விசாரிப்பார்.
மேலும், ஏறத்தாழ 250 காவலர்கள் இப்பணிகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
கோவை மாநகரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடித்து கைது செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை மையப்படுத்தி அங்கு சிறப்பு வாகன தணிக்கை செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது:-
மாநகரில் 50 இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காலை, மதியம், மாலை, இரவு, நேரங்களில் காவல் துறையினர் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் முகத்தை தனது செல்போனில் பதிவு செய்து ஃபேஸ் ரெக கனேஷன் என்ற பிரத்யேக செயலி மூலமாக ஒப்பீட்டு விசாரிப்பார்.
மேலும், ஏறத்தாழ 250 காவலர்கள் இப்பணிகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.