கேரளா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தை, 044 - 22502450 என்ற தொலைபேசி எண் மற்றும் 94965 33777; 94937 99358; 94977 15294 என்ற மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
கோவை: ராமலிங்கம் கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால், 6 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பாத்திரக் கடை நடத்தி வந்தார். அப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டதால், பிப்ரவரி, 5ல், கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-
ராமலிங்கம் கொலை வழக்கில், திருப்புவனம் ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34) மற்றும் கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37) ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள, வஞ்சுவளியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (28), திருவிடைமருதூர் அடுத்துள்ள, திருமங்கலக்குடி சாஹூல் ஹமீத் (27), நபீல் ஹாசன் (28) ஆகியோரும் தேடப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால், ரகசியம் காக்கப்பட்டு, நபர் ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், ஆறு பேருக்கும், 6 லட்சம் ரூபாய் தரப்படும்.

கேரளா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தை, 044 - 22502450 என்ற தொலைபேசி எண் மற்றும் 94965 33777; 94937 99358; 94977 15294 என்ற, மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பாத்திரக் கடை நடத்தி வந்தார். அப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டதால், பிப்ரவரி, 5ல், கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-
ராமலிங்கம் கொலை வழக்கில், திருப்புவனம் ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34) மற்றும் கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37) ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள, வஞ்சுவளியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (28), திருவிடைமருதூர் அடுத்துள்ள, திருமங்கலக்குடி சாஹூல் ஹமீத் (27), நபீல் ஹாசன் (28) ஆகியோரும் தேடப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால், ரகசியம் காக்கப்பட்டு, நபர் ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், ஆறு பேருக்கும், 6 லட்சம் ரூபாய் தரப்படும்.
கேரளா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தை, 044 - 22502450 என்ற தொலைபேசி எண் மற்றும் 94965 33777; 94937 99358; 94977 15294 என்ற, மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.