மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகள்..!! வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை..!

இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இந்த நிலையில், சிறுமுகை வனப்பகுதிக்குள் இருந்து வெளிவந்த 6 யானைகள் கூட்டம் பவானி ஆற்றின் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் லிங்காபுரம் பகுதியை விட்டுச்செல்ல முடியாமல் ஊருக்குள்ளேயே முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்றிரவு சிறுமுகையில் இருந்து லிங்காபுரம் செல்லும் சாலை அருகிலேயே நின்ற யானைகளால் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், வனத்துறையினர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மீண்டும் சென்றது.



மேலும், 6 காட்டு யானைகள் கூட்டம் இன்று அதிகாலையிலேயே வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் சத்தமிட்டு விரட்டியடித்தனர்.

இதனிடையே, காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என லிங்காபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...