தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசே கொள்முதல் செய்ய வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

தக்காளி விலை உயர்வால் எந்த ஒரு விவசாயியும் பயனடையவில்லை, தக்காளி விலையை இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தவும், எப்போதும் சீரான விலையில் கிடைக்கவும், தமிழக அரசே தக்காளிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தக்காளி விலையை இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தவும், எப்போதும் சீரான விலையில் கிடைக்கவும் தமிழக அரசே தக்காளிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால் வரத்து குறைந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி விலை உச்சத்தைத் தொட்டது. தமிழகத்தில் ரூ.140 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை குறையத் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் காய்கறி கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு மூலம் கூட்டுறவுத்துறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ ரூ.53 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே தக்காளிகளைத் தமிழக அரசே கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெய்த மழை காரணமாகவே தக்காளி விலை உயர்ந்தது. இதற்கு முந்தைய காலங்களிலும் மழை பெய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்தால் மற்ற மாநிலங்களில் பெரிதாகப் பெய்யாது.

அல்லது மற்ற மாநிலங்களில் பெரிதாகப் பெய்தால் தமிழகத்தில் பெய்யாது. ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் தொடர் மழை. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயர்ந்தது. இனி வரும் காலங்களில் இது போன்ற சூழ்நிலையில் மட்டுமல்லாது எப்போதுமே தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளை அரசே விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வியாபாரிகள் மற்றும் மக்களிடம் வழங்க வேண்டும்.

அப்போது தான் தக்காளி விலை உயர்வு எப்போதுமே கட்டுக்குள் இருக்கும். தற்போது உள்ள தக்காளி விலை உயர்வால் எந்த ஒரு விவசாயியும் பயனடையவில்லை. இடைத்தரகர்கள், மூன்றாவது நபர்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளார்கள். தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் டி.கே மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறையத் துவங்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.கே.மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு இன்றைய நிலவரப்படி 6000 பெட்டிகள் தக்காளி அதாவது சுமார் 150 டன் தக்காளிகள் கர்நாடக, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ளன. சுமார் ரூ.3 ஆயிரம் வரை விற்ற பெட்டி ஒன்றின் விலை தற்போது ரூ.1000 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்கத்தான் செய்யும்,’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...