கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை-கிணத்துக்கடவு பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை-பொள்ளாச்சி- கிணத்துக்கடவு வழியாக இயக்கப்பட்டு வந்த பல்வேறு ரயில்களை மீண்டும் இயக்க கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் உள்ளதால் தமிழகப் பகுதியில் இயக்கக்கூடிய ரயில்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கிணத்துக்கடவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவையிலிருந்து இயக்கப்பட்டு வந்த திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும், கூடுதலாகப் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும், மேலும் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் இருப்பதால் தமிழகத்துக்கு வரவேண்டிய பல திட்டங்கள் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையத்தைச் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தைச் சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவதாக கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ரயில் பயணிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்பித்தன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவராஜ், நகர தலைவர் செந்தில்குமார், பாஜக மாவட்ட நிர்வாகி துரை, கம்யூனிஸ்ட் கட்சி மருதாசலம், கிணத்துக்கடவு வியாபாரி சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் ரகுராஜ், பொருளாளர் சுப்பிரமணி, திமுக மகளிரணி கீதாகலைவாணி, லட்சுமணன் மற்றும் தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்களின் நிர்வாகிகள்,ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...