நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின்மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 18 வார்டுகள் கொண்ட மதுக்கரை பேரூராட்சியை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டு நேற்று நகராட்சி நிர்வாகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, பேரூராட்சியில் நடந்த திட்டப்பணிகள் பெறப்பட்ட வரியினங்கள், பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செயல் அலுவலர் பத்மலதா கூடுதல் பொறுப்பாக மதுக்கரை பேரூராட்சியை கவனித்து வந்தார். குடிநீர் வினியோகம், சாலை சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை கொரோனா கால சூழலிலும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொற்றுநோய் தடுப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பொது இடங்கள் பராமரிப்பு பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின் மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டு நேற்று நகராட்சி நிர்வாகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, பேரூராட்சியில் நடந்த திட்டப்பணிகள் பெறப்பட்ட வரியினங்கள், பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செயல் அலுவலர் பத்மலதா கூடுதல் பொறுப்பாக மதுக்கரை பேரூராட்சியை கவனித்து வந்தார். குடிநீர் வினியோகம், சாலை சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை கொரோனா கால சூழலிலும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொற்றுநோய் தடுப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பொது இடங்கள் பராமரிப்பு பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின் மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.