கோவையில் 18 வார்டுகள் கொண்ட மதுக்கரை பேரூராட்சியை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு..!

நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின்மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 18 வார்டுகள் கொண்ட மதுக்கரை பேரூராட்சியை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டு நேற்று நகராட்சி நிர்வாகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, பேரூராட்சியில் நடந்த திட்டப்பணிகள் பெறப்பட்ட வரியினங்கள், பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செயல் அலுவலர் பத்மலதா கூடுதல் பொறுப்பாக மதுக்கரை பேரூராட்சியை கவனித்து வந்தார். குடிநீர் வினியோகம், சாலை சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை கொரோனா கால சூழலிலும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொற்றுநோய் தடுப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பொது இடங்கள் பராமரிப்பு பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின் மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...