வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூரில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.